கரோனா: பலியான குடும்பங்களுக்கு இழப்பீடு ராகுல் காந்தி அழுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 2, 2022

கரோனா: பலியான குடும்பங்களுக்கு இழப்பீடு ராகுல் காந்தி அழுத்தம்

பெங்களுரு,அக்.2 கரோனாவால் பலி யானோர் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். 

காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த மாதம் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைப் பயணத்தை தொடங்கினார். தற்போது அவர் இந்த நடைப் பயணத்தை கரு நாடக மாநிலத்தில் நடத்தி வருகிறார். அங்குள்ள குண்டல் பேட்டில் அவர் தனது  நடைப் பயணத்தின் போது, கரோனா வைரஸ் தொற்று பாதித்து, ஆக்சிஜன் பற்றாக் குறையால் இறந்து போனவர்களின் குடும்பங்களை சந்தித்து கலந்துரை யாடினார். ' இதையொட்டிய அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அதனுடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "பிரதமர் அவர்களே, பா.ஜ.,க. அரசு கரோனா தொற்றை தவறாக நிர்வகித் ததால், தனது தந்தையை இழந்துள்ள பிரதிக்‌ஷா கூறுவதை கேளுங்கள். அவர் தனது படிப்பைத் தொடரு வதற்கும், தனது குடும்பத்தின் வாழ்வா தார தேவைகளுக்கும் அரசின் ஆதர வைக் கோருகிறார். கரோனாவால் பலியானோர் குடும்பங்கள், நியாயமான இழப்பீட்டைப் பெறுவதற்கு தகுதி இல்லையா?" என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 

"ராகுல் காந்தி நடத்திய கலந் துரையாடலின்போது, கரோனா வால் பலியானோர் குடும்பத்தினர், தங் களுக்கு அன்பானவர்களின் இறப்பு களைக் கூட ஒப்புக்கொள்ளாத பா.ஜ.க. அரசின் மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். 

பிரதிக்‌ஷா என்ற சிறுமியின் வார்த் தைகள், அந்த அரங்கில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. தன் தந்தையின் மரணத்துக்கு பிறகு வேலையில்லாமல் இருக்கும் தன் தாய் படும் பாடுகளை கண்டு வந்ததை வேதனை யுடன் கூறினார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment