அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற்றம் தினமணிக்கு தெரியாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற்றம் தினமணிக்கு தெரியாதா?

 தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை கடந்த மே மாதத்தில் வேனல்ஸ் சாலையை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை எனப் பெயர் மாற்றி அரசாணை வெளியிட்டது. தினமணி (9.9.2022) ஏடோ இன்னமும் பழைய பெயரையே வெளியிடுவது ஏன்? சாலை பெயர் மாற்றம் தினமணிக்கு தெரியாதா?

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசிடம், "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் பாதுகாத்து அவரது இயக்கமாம் திராவிடர் இயக்கத்தை மேலும் அய்ந்தாண்டு காலம் காத்தவரும், ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லம் அமைத்தும், மேலும் 60 ஆண்டுகளாக திருச்சியில் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவருமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டை அரசு சார்பில் நடத்திடும் வாய்ப்பை இதற்கு முன் பெறவில்லை.

இந்த நிலையில், பெரியார் ஈ.வெ.ரா. சாலை அருகில் உள்ள வேனல்ஸ் சாலையில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் முழு உருவச் சிலை தமிழ்நாடு அரசின் உரிய அனுமதியோடு மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் 1994 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அந்த சிலை அமைந்து இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பின் பகுதியிலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை 

ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்வது அவரது நூற்றாண்டு காலக்கட்டத்தில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை யாரை பெருமைப்படுத்தியதாகவும், மகளிர் மாண்பை உயர்த்தியதாகவும் இருக்கும்." எனக் கோரி இருந்தார்.

இதனை ஏற்று சென்னை மாநக ராட்சி மண்டலம் 5-க்கு உள்பட்ட சென்னை வேனல்ஸ் சாலையை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை வெளியிட்டு இருக்கிறது.

அன்னை மணியம்மையார் சிலை அருகிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்தையொட்டி ஆல்பர்ட் திரையரங்கம் வரை உள்ள வேனல்ஸ் சாலை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர்ப்பலகை அரசு சார்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தினமணி (9.9.2022) ஏட்டில் அன்னை 

ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை என்று வெளியிடுவதற்கு பதிலாக பழைய பெயரையே வெளியிட்டிருப்பது ஏன்?

No comments:

Post a Comment