லக்னோ, செப்.29 உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை அளித்ததில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிராவ்லி காஸ்பூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சிகிச்சைக்காக பெற்றோர் சென் றுள்ளனர். அந்தக் குழந்தை 'பாப் கார்'னை சாப்பிட்டதில் அது தொண்டையில் சிக்கியுள்ளது. அதற்கு அவசர சிகிச்சை அளிக்க சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இரவு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் தர்மேந்திர குப்தா மருத்துவமனையில் இல்லை. இதன்பின்னர், தகவல் அறிந்து ஒரு மணிநேரம் கழித்து குடிபோதையில் அவர் மருத் துவமனைக்கு வந்துள்ளார். பின்னர், சிகிச்சை அளித்தபோது, குழந்தை உயிரிழந்து விட்டது. இதனை தொடர்ந்து, அந்த மருத் துவர் குழந்தையின் தாயாரிடம் வேறொரு குழந்தையை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள் ளார் என கூறி குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்ட க்காணொலி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மருத்துவர் குப்தாவை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் நீலம் குப்தா பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார். 3 மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணைக்கும் உத்தரவிட்டார். இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி அவதேஷ் குமார் கூறும் போது, குழந்தையின் உறவினர்கள் கூறிய குற்றச்சாட்டுகளின் பேரில் மருத்துவரிடம் விசாரணை நடத் தப்பட்டு உள்ளது. அதில், குற்றச் சாட்டுகள் உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment