சென்னை,செப்.6- சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வரும் 13ஆம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமனம் செய்து ஒன்றிய சட்டத்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் 13ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதி நியமிக்கப்படும்வரை உயர் நீதிமன்ற பணிகளை மேற்கொள்வதற்காக பொறுப்பு தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய சட்டத்துறை வெளியிட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.துரைசாமி வரும் 22ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு எண்ணிக்கை 75 ஆகும். தற்போது, 56 நீதிபதிகளே உள்ளனர். இந்நிலையில் தலைமை நீதிபதி மற்றும் அவரை தொடர்ந்து நீதிபதி துரைசாமி ஆகியோர் ஓய்வு பெறவுள்ளதால் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறையவுள்ளது.
Tuesday, September 6, 2022
உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமனம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment