தேசிய கல்விக் கொள்கையின் பாதகங்களை ஆசிரியர்கள், மாணவர்களிடம் கூற வேண்டும் அமைச்சர் முனைவர் க.பொன்முடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

தேசிய கல்விக் கொள்கையின் பாதகங்களை ஆசிரியர்கள், மாணவர்களிடம் கூற வேண்டும் அமைச்சர் முனைவர் க.பொன்முடி

சென்னை,செப்.12- ஒன்றிய அரசின் தேசிய கல்வி  கொள்கையின் பாதக மாக அம்சங்களை  ஆசிரியர்கள் மாணவர்களிடம்  எடுத்துக் கூறவேண் டும் என்று உயர்  கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கேட்டுக் கொண்டார்.

சென்னையில் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அவர் பேசியதாவது,

“இந்த மாநாட்டிலே பங்கேற்பதில் மிகுந்த பெருமை, ஏனென்றால் உங் களில் ஒருவனாக இருந்தவன் நான். 1985ஆம் ஆண்டு அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், அரசு பணியாளர்களையும் ஒருங் கிணைத்து உருவாக்கப்பட்ட ஜாக்டோ ஜியோவில் இணைந்து நானும் செயல்பட்டிருக்கிறேன். எனது குடும்பமே ஆசிரியர் குடும்பம். எனது அப்பா, அம்மாவும், தாத்தா என அனைவரும் ஆசிரியர்கள். உங்களது அனைத்து கோரிக்கைகளும் நியாயமானது. ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) எதிர்க்கிறோம் என இம் மாநாட்டில் முதல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

கியூட் என்ற ஒன்றைக்கொண்டு வந்து பிஏ, பிஎஸ்சி படிப்பதற்கும் நுழைவுத் தேர்வு என ஒன்றிய அரசு கூறுகிறது. 

அதேபோல் 3, 5, 8ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

அப்படி கொண்டு வரப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த கல்விக்கொள்கையை  நீங்கள் மட்டும் எதிர்த்தால் போதாது, அதன் பாதிப்புகளை பொதுமக்களி டையே அரசு ஊழியர்களும், மாண வர்களிடையே ஆசிரியர்களும் எடுத்துக் கூற வேண்டும். 

அதுதான் இந்த மாநாட்டின் வெற்றியாகும். அரசு என்னதான் திட்டங்களை தீட்டினாலும் அதை நிறைவேற்றிக் கொடுக்கும் பொறுப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உங்களிடம்தான் இருக்கிறது என் பதை யாரும் மறுத்துவிட முடியாது. 2 விழுக்காடு இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 95 விழுக்காடு நிதியை செலவிட வேண்டுமா என மேனாள் முதலமைச்சர் ஜெய லலிதா  கிண்டல் செய்தார். அது போல் அல்லாமல் தற்போதைய முதலமைச்சர் உங்கள் கோரிக்கை களை நிறைவேற்றுவார். நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படவேண்டும்.

-இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment