எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதா? பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு: டில்லி சட்டசபையில் ரகளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதா? பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு: டில்லி சட்டசபையில் ரகளை

 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதா? 

பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு: டில்லி சட்டசபையில் ரகளை

புதுடில்லி, செப். 1- டில்லி சட்டசபை யில், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் குற்றச்சாட்டு குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தீர் மானத்தால் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர் கள் இடையே மோதல் ஏற் பட்டது சட்டமன்றமும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட் டது. டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க முயற் சிப்பதாக (ஆபரேஷன் லோட் டஸ்) ஒன்றிய பா.ஜ.க. அரசு மீது முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இதில் முக்கியமாக, கலால் கொள்கை விவகாரத்தில் சி.பி.அய். வழக்கில் சிக்கியுள்ள துணை முதல்அமைச்சர் மணிஷ் சிசோடியா, தான் ஆம் ஆத்மியை விட்டு விலகினால் தன் மீதான வழக்குகளை திரும்பப் பெறலாம் என பா.ஜ.க. கூறியதாக ஏற்க னவே அம்பலப்படுத்தி இருந்தார். 

இதைப்போல பல சட்ட மன்ற உறுப்பினர்களை அச்சு றுத்தியும், பணம் கொடுத்தும் தன் பக்கம் இழுக்க முயற்சிப்ப தாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டை கிளப்பி இருந்தது. எம்.எல்.எ.க் களுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறப் பட்டது.

இதைத்தொடர்ந்து தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால், சட்ட சபையின் நடப்பு கூட்டத் தொடரில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்துள்ளார். 

ஆம் ஆத்மியின் இந்த குற்றச் சாட்டை மறுத்த பா.ஜ.க.வினர், கட்சி மாறுவதற்காக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடி வரை கொடுக்க முன் வந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும் என கூறியது. அத் துடன் இந்த குற்றச்சாட்டை கூறும் சட்டமன்ற உறுப்பினர் களிடம் உண்மை கண்டறியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பா.ஜ.க.வினர் செய்தியா ளர்களிடம் கூறியிருந்தனர். 

இந்த விவகாரம் நேற்று (31.8.2022) சட்டசபையில் பெரும் புயலை கிளப்பியது. நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்துக் காக காலையில் அவை கூடியதும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் விஜேந்தர் குப்தா எழுந்து, வகுப் பறைகள் கட்டியதில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக தான் அளித் திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என பேரவைத் துணைத் தலை வர் ராக்கி பிர்லாவை கேட்டுக் கொண்டார்.

அப்போது பா.ஜ.க.வினரின் ஆபரேஷன் லோட்டஸ் பிரச்சி னையை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அதிஷி எழுப்ப முயன்றார். இதனால் இரு தரப் புக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபை 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர் மீண்டும் கூடிய போது பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிஷி, ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் மூலம் டில்லியில் ஆட்சியை மாற்றிய மைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 

அமலாக்கத்துறை, சி.பி.அய்., வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டுதல், அவர்களை கொள் ளையிட்டு செல்லுதல் ஆகிய 3 வழிகளில் ஆபரேஷன் லோட் டஸ் செயல்படுத்தப்படுவதாக வும் அவர் கூறினார். ஆம் ஆத் மியை விட்டு வெளியேறுவதற்கு தங்கள் கட்சி சட்டமன்ற உறுப் பினர்களுக்கு ரூ.20 கோடி பேரம் பேசப்படுவதாகவும், செங்கோட் டையில் பிரதமர் மோடி பேசும் ஜனநாயகம் இதுதானா? என் றும் கேள்வி எழுப்பிய அவர், மணிப்பூர், மேகாலயா, அருணா சல பிரேதசம், கோவா, மராட் டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இவ்வாறுதான் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் துர் கேஷ் பதக், ஆம் ஆத்மி சட்ட மன்ற உறுப்பினர்களை இழுக் கும் குற்றச்சாட்டுக்கு சி.பி.அய். விசாரணை தேவை என்ற பா.ஜ.க.வின் கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்தார். குல்தீப் குமார் என்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர், பா.ஜ.க.. வின் ரூ.20 கோடி பேரத்தை ஏற்க மறுத்ததால், போலி வழக்கில் தன்னை சிறைக்கு அனுப்புவோம் என பா.ஜ.க.வினர் மிரட்டுவதாக கூறினார். இதைத்தொடர்ந்து ஆபரேஷன் லோட்டஸ் விவ காரத்தில் சி.பி.அய். விசாரணை தேவை கேட்டு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்க்கள் முழக்கமிட்டனர். இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக் கப்பட்டது. பின்னர் 'ஆபரேஷன் லோட்டஸ்' தொடர்பாக விசா ரணை நடத்துமாறு மனு கொடுப் பதற்காக சி.பி.அய். தலைமை அலுவலகத்துக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள் மாலையில் சென்றனர். ஆனால் அவர்களை அதிகாரி கள் சந்திக்கவில்லை. இதைத் தொடர்ந்து அலுவலகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்க்கள் மறியலில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை சந்திக்க நேரம் ஒதுக் குமாறு ஏற்கனவே மனு அனுப் பியும் சி.பி.அய். இயக்குநர் சந் திக்க மறுப்பதாக குற்றம் சாட் டிய அவர்கள், இதன் மூலம் பா.ஜ.க.வின் கட்டளைப்படி சி.பி.அய். செயல்படுவது உறுதி யாகிறது என்றும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment