கண்ணூர்,செப்.30- ரயிலில் மலைப்பாம்புகளை கடத்திய ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிளாஸ்டிக் பைக ளில் 4 மலைப்பாம்புகள் கடத்தப்பட்டன. இந்த சம்பவத்தில், ஒப்பந்த ஊழியரான கமல்காந்த் சர்மா (40) என்பவரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இவர் கண்ணூர் ரயில் நிலையத்தில் பாம்புகளை ஒப்படைக்கும் போது பிடிபட்டார். பாம்புகளை வாங்க வந்த நபரும் சிக்கினார். பாம்புகளின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய் என வாங்க வந்தவர் கூறினார். அவரையும் பாம்புகளையும் கோழிக்கோடு ரயில்வே காவல்துறை ஆய்வாளரிடம் ஒப் படைத்தனர்.
Friday, September 30, 2022
புற்று நோய் மருந்து என்கிற பெயரால் ரயிலில் மலைப்பாம்புகள் கடத்தல்: இருவர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment