திருவனந்தபுரம், செப்.19- தந்தைபெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் விழுமியங்களை நிலை நிறுத்த உறுதியேற் போம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெரியார் குறித்து டிவிட் செய்துள்ளார். அதில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான நமது போராட்டத்தின் உருவகம்தான் பெரியார். அவரது பிறந்த நாளில் (17.9.2022) பகுத்தறிவு மற்றும் சமூகநீதியின் விழுமியங்களை நிலைநிறுத்தவும், அவரது பாரம்பரியத்தை போற்றவும் உறுதிமொழி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment