கவிஞர் கலி.பூங்குன்றன்
அய்யா நீங்கள்
மறைந்து
49 ஆண்டுகள்
ஓடிவிட்டன.
ஆனாலும்
எங்கள் மக்களுக்கு
உயிர்ப்பிச்சை
அருளிக்
கொண்டே இருக்கிறாய்!
உரிமை
உயிர்க்காற்றை
ஒவ்வொரு நொடியும்
வாயில் வைத்து
ஊதுகின்றாய்!
மண்டைக்குள்
மின்சாரத்தை
செலுத்திக்
கொண்டே இருக்கிறாய்!
இருண்ட மூளை
இரவியாய்
ஒளிர்கிறது!
மத்தியப் பிரதேசத்திலும்
உங்கள்
மண்டைச் சுரப்பை
தொழுதிட
எழுந்தனர்!
பெரியார் மண்ணில்
கால்படுவதால்
பெருமிதம்
கொள்கிறார்- ராகுல்!
கனடாவிலும்
கர்ச்சனை
செய்யப்போகிறாய்!
கண்டம் விட்டுக்
கண்டம் தாவும்
ஏவுகணையோ
நீங்கள்!
மகளிர் பேசுவது
இப்பொழுதெல்லாம்
உங்கள் குரலில்தான்!
இளைஞர்களின்
விழிகளில்
எதிரிகளின் முகவரி
தெரிந்தே விட்டது!
உம் பிறந்த நாளில்
முதல் அமைச்சர் முதல்
அரசு ஊழியர் எல்லாம்
உறுதிமொழி ஏற்பு
என்னே மாற்றம்!
என்னே மாற்றம்!!
‘திராவிட மாடல்’ அரசாம்
தேன்மழையில்
மக்கள் குளியல்!
“திராவிடம்”
வெறும் இனப்பெயரல்ல;
தத்துவத்தின்
உள்ளடக்கம்!
எழுச்சிக்குத்
தலைப்பெழுத்து
புரட்சிக்குப்
புதுப் பெயர்சூட்டு!
பெரியார் உலகம்
என்பதுதான்
இப்பொழுது
எங்கும் பேச்சு!
அதை முடிக்காமல்
முடியாது
எங்கள் மூச்சு!
வெல்லுவோம்
வீரமணி தலைமையில்!
விடியும்
புத்துலகம்
வெகுவிரைவில்!
வாழ்வீர்
வரலாறு
உள்ள வரையில்!
வணக்கம்! அய்யா வணக்கம்!!
No comments:
Post a Comment