உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியாதாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியாதாம்!

ஒன்றிய அரசு நிலைப்பாடு!

புதுடில்லி, செப்.16 உக்ரைனிலிருந்து திரும்பிய  மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் உயர் படிப்பு மற்றும் மருத்துவம் படித்துவந்த ஆயிரக் கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், உக்ரைனில் எந்தவித தேர்வுமின்றி, பணம் கொடுத்து, கல்லூரிகளில் சேர்ந்து, படிப் பதால், அவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடி யாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், உக்ரை னில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக் கழகங்களில் படிக்கலாம் என  இந்திய ரஷ்ய தூதர் அறிவித்தார். அதுபோல, இந்திய வெளியுறவுத் துறையும்,  அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணையின்போது, ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்க உத்தரவிடப் பட்டது. இந்த நிலையில், வழக்கு நேற்று (15.9.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உக்ரைனில் மருத் துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் கல்வி யைத் தொடர முடியாது என தெரிவித்துள்ளது. மேலும்,  இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தி யாவில் படிப்பைத் தொடர முடியாது என்றும், வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருவோரை இந்திய கல்லூரிகளுக்கு மாற்ற தேசிய மருத்துவ ஆணையமும் அனுமதி தரவில்லை, எனவே மாணவர்களை இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க முடியாது என கூறி உள்ளது.

இந்திய அரசின் இந்த தகவல் உக்ரைனிலிருந்து மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

ஏற்கெனவே இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை  உறுப்பினர் பினாய் விஸ் வம்  கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பவார், ஒன்றிய அரசின்  நிலைப்பாட்டை  தெளிவுபடுத்தினார்.  உக்ரைனில் இருந்து நடு வழியில் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒன்றிய அரசின் முடிவை, தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கெனவே சேர்ந்த மாணவர்களை சேர்த்துக் கொள்வது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் (1956) மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (2019) ஆகியவற்றை மீறுவதாகும் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment