குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாணவிகளுக்கு இலவச கல்வி - 300 யூனிட் மின்சாரம் இலவசம்: ராகுல் வாக்குறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாணவிகளுக்கு இலவச கல்வி - 300 யூனிட் மின்சாரம் இலவசம்: ராகுல் வாக்குறுதி

அகமதாபாத், செப். 6- குஜராத் தில் இந்த ஆண்டு இறுதி யில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள் ளது. இதையொட்டி ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. குஜ ராத்தின் அகமதாபாத் தில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அந்த கட்சி யின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது.

குஜராத்தில் காங்கி ரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் ரூ.3 லட் சம் வரையிலான கடன் கள் தள்ளுபடி செய்யப் படும். சமையல் எரிவாயு உருணை ரூ.500-க்கு வழங் கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 300 யூனிட் வரை இல வசமாக மின்சாரம் விநி யோகிக்கப்படும். மாநி லத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும். 3,000 ஆங்கில வழி பள்ளிகள் தொடங்கப் படும். மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங் கப்படும்.

ஆளும் பாஜக அரசு, சர்தார் படேலுக்கு பிரம் மாண்ட சிலையை உரு வாக்கி உள்ளது. ஆனால் அவரது கொள்கைக ளுக்கு விரோதமாக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் பெரும் தொழிலதிபர்களின் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். அவர்கள் ஒருபோதும் விவசாயிகளின் கடன் களை தள்ளுபடி செய்ய மாட்டார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

No comments:

Post a Comment