மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் பெரியார் 1000

மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் 24.08.2022 அன்று 4 பள்ளிகளிலும், 25.08.2022 அன்று 4 பள்ளிகளிலும் மொத்தம் 8 பள்ளிகளில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வு நடைபெற்றது. வெள்ளியங்காடு,  தோலம்பாளையம்,  புஜங்கனூர் மற்றும் காரமடை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழகம் மூலமாக பெரியார் 1000 வினா விடை போட்டித் தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வேலுசாமி,  மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தருமன்.வீரமணி மற்றும் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழக பேராசிரியர் அருண்குமார் ஆகியோரது மேற்பார்வையில் இத்தேர்வு நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள் ஏ.பெள்ளி,  வனிதா, சத்தியமூர்த்தி,  ஆசிரியர் சாந்தி ஆகியோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.


No comments:

Post a Comment