அறிவுப்புரட்சி மாநிலமாக தமிழ்நாடு மாறட்டும்! முதல்-அமைச்சர் சூளுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

அறிவுப்புரட்சி மாநிலமாக தமிழ்நாடு மாறட்டும்! முதல்-அமைச்சர் சூளுரை

சென்னை, ஆக. 6- ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் புத்தக திருவிழா நேற்று (5.8.2022) தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென் னையிலிருந்து காணொலிமூலம் திறந்து வைத்து பேசியதாவது:

அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தக கண் காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதிப்பாளர் களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்தர புத்தக பூங்கா அமைப்ப தற்கான ஒப்புதலையும் தமிழ்நாடு அரசு வழங்கி இருக்கிறது. மொழி பெயர்ப்பு திட்டம், தமிழ்நூல்கள் நாட்டுடமை, எழுத்தாளர்கள் பிறந்த நாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலக பல்கலைக்கழகங்களில் செம் மொழித் தமிழ் இருக்கைகள், நூல கங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசை தோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என ஏராளமான தமிழ் காப்பு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.

சங்க இலக்கிய நூல்களை செம் பதிப்பாக கொண்டு வர இருக்கி றோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பிறமொழியிலிருந்து தமிழுக்கும் பல்வேறு நூல்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. 

வாசிக்க வேண்டும்

உலகில் எந்த மொழிக்கும் இல் லாத பழமை சிறப்பும், இலக்கிய இலக்கண வளமையும் தமிழ் மொழிக்கு உண்டு. இந்த தமிழ் மொழிதான் தமிழ் இனத்தைக் காக்கும் காப்பரணாக அமைந்தி ருக்கிறது. எத்தகைய படையெடுப் புகள் வந்தாலும் அத்தனை படை யெடுப்புகளையும் தாங்கி நிற்கும் வல்லமை நம்முடைய தமிழ் மொழிக்கு உண்டு. பட்டங்கள் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவின் கூர்மைக்காக, நம்முடைய சிந்தனையை வளர்த்து கொள்வ தற்காக, நாம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதற்காக, நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காக, அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும். 

அறிவுப்புரட்சி 

மாநிலம் ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடா தீர்கள். அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள். எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும். இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடு பவர்கள் அந்த கலையில் தேர்ந் தவர்கள். ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள். தமிழ்ச் சமூகம் பகுத்தறிவுச் சமூகம் பொய் களையும் கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம். தமிழ்நாடு அறிவுப் புரட்சி மாநிலமாக பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடை பெற வேண்டும். அறிவே அனைத் துக்கும் அரண். புத்தகங்களே புத் துணர்வு அமுதம். 

-இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் அமைச்சர் முத்து சாமி, சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, மக் கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், செயலா ளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment