“செயற்கைக் கருத்தரிப்பு மய்யங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்” மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

“செயற்கைக் கருத்தரிப்பு மய்யங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்” மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,ஆக.3- “தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் செயற்கைக் கருத்தரிப்பு மய்யங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய  வெளியுறவு சேவை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு தமிழ்நாடு சுகாதாரத் துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண் டனர். அவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறையின் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகா தாரத் துறைச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பி ரமணியன், "பெண்களுக்கு பேறு காலத்திற்குப்பின் கருத்தடை வளையம் பொருத்தியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கில் சுகாதாரத் துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மய்யங்கள் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். கடுமையான விதிமுறைகள் விதிக்கப் பட்டுள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால், யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் பேர் இன் னும் போட வேண்டியது இருக்கிறது. வரும் 7ஆம் தேதி 50 ஆயிரம் இடங் களில் 34-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத் தப்படும்.

இதுவரை தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்து முடிவுகளை வழங்கப் படும்.  அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் மருத்துவர்கள் முறையாக வருகை பதிவேட்டை கையால் கிறார்களா என்று ஆய்வு செய்ய முதல் வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணி புரிந்தால் அது வருத்தத்திற்கு உரியது. மருத்துவர்கள் மன உளைச் சலில் இருப்பதை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment