உச்சநீதிமன்றத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய தலைமை நீதிபதி அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

உச்சநீதிமன்றத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

புதுடில்லி, ஆக.13- உச்சநீதிமன்றத்தில் அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நீதிமன்ற அறைக்குள் வழக்குரைஞர்கள் அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள் ளார். மேலும், வழக்கை அவசரமாக விசாரிக்க முறையிட வந்த வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊழி யர்களும், சக நீதிபதிகளும் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே உச்சநீதிமன்றத்தில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறி வுறுத்தினார்.


No comments:

Post a Comment