சமூகம் முன்னேற்றம் அடைந்திட ஆண், பெண் பாலினப்பாகுபாடு, ஜாதிப் பாகுபாடுகள் இருக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

சமூகம் முன்னேற்றம் அடைந்திட ஆண், பெண் பாலினப்பாகுபாடு, ஜாதிப் பாகுபாடுகள் இருக்கக் கூடாது

கல்லூரி மாணவியின் கேள்விக்கு தி.மு.க. மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி பதில்

சென்னை, ஆக. 27- சென்னை டபிள்யூசிசி கல்லூரியில்  (Women's Christian College) கடந்த 24.8.2022 அன்று பன்னாட்டு ஆய்வுப்படிப்புக்கானத் துறை (International Studies) யூத் டாக்ஸ்  (Youth Talks)  அமைப்பு இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மக் களவைக் குழுத்துணைத் தலை வர் கனிமொழி கலந்துகொண் டார். அப்போது அவருடன் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி கள் கலந்துரையாடினர்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவி ஒருவர், “இந் தச் சமூகத்தில் மாற்றத்தை எதிர் பார்க்கும் போதும், வீட்டில் இதுகுறித்துப் பேசும் போதும், 'இல்ல.. நீ சின்னப் பொண்ணு.. போய் படி, இதெல்லாம் உனக் குத் தெரியாது' என்று சொல் கிறார்களே! அவர்கள் பின்பற்று வதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் சமூகம் சரியாகத் தான் இருக்கிறதா? எனக்கு அது சரியானதாக இல்லை என்றே தோன்றுகிறது. எனில், சரியானதாக இருந்தால் நம்மை ஆண்-பெண் என்று பிரிக்கமாட்டார்களே.

“நீ வேலைக்கு போ.. நீ வீட்டுல சமை..” என்று சொல்லமாட்டார் களே. “நீயும் வேலைக்குப் போ.. இரண்டு பேரும் சேர்ந்து குடும் பத்தைப் பார்த்துக் கொள்ள லாம்” என்று தானே சொல்ல வேண்டும். அப்படியானால், இச் சமூகம் தவறாகத் தானே இருக் கிறது?” என்று கேள்வி எழுப் பினார்.

அதற்கு பதிலளித்த கனி மொழி எம்.பி, "நிச்சயம், தவறா கத் தான் இருக்கிறது. அதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆண்-பெண் என்று பிரிப்பது மட்டு மில்லை, ஜாதி என்ற வகையில் பிரிக்கப்படுகிறோம். ஜாதிக்கு ஒன்றென வெவ்வேறு சுடுகாடு களும், இடுகாடுகளும் இருக்கின் றன. ஊர்ப் பாதையில் நடக்க முடியாது. கோயிலுக்குள் அனு மதிக்க மாட்டார்கள்.

தேநீர்க் கடைகளில் இந்த ஜாதிக்குக் கொடுத்த தம்ளரில் இன்னொரு ஜாதிக்குக் கொடுக்க மறுக்கிறார்கள். உலகில் எங்கு எடுத்துக் கொண்டாலும், மதத் தில் தொடங்கி ‘உன்னுடையதை விட என்னுடையது பெரியது’ என்ற எத்தனையோ பிரிவினை கள் இந்தச் சமூகத்தில் தொடர்ந் திருந்து கொண்டுதான் இருக் கின்றன.

நாம் நிறைய இழந்திருக்கி றோம். மாற்றங்கள் தொடங்கியிருக்கிறது. பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். பெண்கள் சமமாக வாழ்வதற்கு வாய்ப்புகள் வந் திருக்கிறது. இதில், ஒரு நல்ல விஷயம் என்றால் நிறைய இடங் களில் சில மாற்றங்கள் நடக்கி றது. இங்கு, தமிழ்நாட்டில் எத் தனை பேர் தங்களின் பெயருக்குப் பின்னால் ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்கிறோம்? அப்படிப் போடுவதற்கு வெட் கப் படுகிறோமில்லையா? அது பெருமை என்று நினைத்த காலத்தைக் கடந்து, இங்கு வந்திருக்கிறோம்.

நாம் முன்னேறுவோம். தொடர்ந்து நாம் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும். இதற்கு முன்னிருந்தவர்கள், இப் படியான பிற்போக்கான விஷ யங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இதற்கு எதிராக தொடந்து நாம் போராட வேண்டும். நாளை அது உங்களின் பொறுப்பு. நிச் சயம் இந்த உலகம் சரியானதாக இல்லை. அது மாற்றப்பட்டு, முன்னேற்றிட வேண்டும். அது உங்களின் கைகளிலே உள்ளது. சமூகம் பற்றிய உங்களின் அக் கறை மகிழ்ச்சியளிக்கிறது. அதை மாற்ற நினைக்கும் உங்களின் எண்ணம் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது." என்று கூறினார்.

No comments:

Post a Comment