மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
புதுடில்லி, ஆக.12- டில்லியில் காங் கிரசார் கருப்புடை தரித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட் டத்தை நடத்தினார்கள். அதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில் விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு பதிலடியாக மேனாள் நிதி யமைச்சரும், மூத்த காங்கிரசு கட்சித் தலைவருமான ப.சிதம்பரம் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது,
கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒரு போதும் மக்களின் நம்பிக்கை யைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்
தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட் டையை அணிந்தார். அவர் தமிழ் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதி களைத் தவிர) என்பதை நாடறியும்.
-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள் ளார்.
பிரதமர் மோடிக்கு பதிலடியாக வெளி யிட்டுள்ள மேனாள் நிதி யமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment