புதுக்கோட்டை,ஆக.26-புதுக்கோட்டை மாவட்டத் தில் பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் அக்குடும்பத்தினரைக் கலந்து கொள்ள அனுமதி வழங்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம் பொன்னமராவதி வட்டாட் சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி ஜாதிமறுப்புத் திருமணம் செய்த 25 குடும்பத்தை சேர்ந்த வர்களிடம் தலைக்கட்டுவரி வசூல் செய்து, திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், கலப்புத் திருமணம் செய்ததால் ஆண்டுதோ றும் நடைபெறும் பங்குனி கோயில் திருவிழாவில் அனுமதி மறுக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி, பொன்னமராவதி வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி ஜாதி மறுப்புத் திருமணம் செய்த 25 குடும்பத்தை சேர்ந்த வர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திரு விழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment