நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காங்கிரஸ் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காங்கிரஸ் கருத்து

புதுடில்லி, ஆக். 3- மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை தென் மாநிலங்கள் எதிர்க்கும் என காங்கிரஸ் கூறியுள் ளது. 2031-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்புக்குப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர்க ளின் எண்ணிக்கை அதி கரிக்கப்படும் எனவும், இது நாட்டுக்கு மிகப் பெரிய அரசியல் சவாலை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார். 

மாநிலங்களவை புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்று பேசிய அவர், இந் திய ஜனநாயகத்தில் மாநி லங்களவையின் பங்க ளிப்பு குறித்து விரிவாக உரையாற்றினார். 

மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் பேசினார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 2026 ஆ-ம் ஆண்டு வரை மாநி லங்களவை மறுவரை யறை செய்யக்கூடாது என மேனாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையி லான அரசு சட்டத் திருத்தம் நிறைவேற்றியிருந்தது. அதாவது 2026-ஆம் ஆண்டு வரை மாநி லங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக் காது. ஆனால் அதன் பின்னர் நடைபெறும் 2031ஆ-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக் குப்பின், அதற்கேற்ப இந்த எண்ணிக்கை அதி கரிக்கப்படும்.

 ஆனால் நாட்டுக்கு இது மிகப்பெரிய சவா லாக இருக்கும் என நான் கூறுகிறேன். அதாவது தென்னிந்திய மாநிலங் கள், மேற்கு மற்றும் சில வடக்கு மாநிலங்கள் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை செவ்வனே செயல்படுத்தி உள்ளதால் அங்கெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை குறைந்திருக்கும். ஆனால் உத்தரப்பிர தேசம், பீகார், ஒடிசா போன்ற ஒன்றிய மாநிலங் களில் அடுத்த 10 ஆண்டு களில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கும். இது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப் பினர் எண்ணிக்கையில் எதிரொலிக்கும். தற்போ தைய ஒன்றிய அரசு அர சியல் சாசனத்தை திருத் தலாம். ஆனால் 2026-ஆம் ஆண்டுக்குப் பிந் தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே உறுப்பினர்களின் மறு வரையறையை செய்ய வேண்டும் என தற்போ தைய அரசியல் சாசனம் சொல்கிறது. 

அவ்வாறு செய்யும் போது கேரளா எதிர்க் கும். தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா போன்ற மாநி லங்களும் எதிர்க்கும். அவற்றில் பா.ஜனதா அரசு இருந்தாலும் இது தான் நடக்கும். இந்த நட வடிக்கையால் பஞ்சாப் மாநிலமும் பாதிக்கப் படும். குடும்பக்கட்டுப் பாடு திட்டத்தை வெற்றி கரமாக செயல்படுத்திய அனைத்து மாநிலங்களும் இதை எதிர்க்கும். இதை தென்னிந்திய மாநில முதல்-அமைச்சர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறி னார்.

No comments:

Post a Comment