சென்னை, ஆக.22- தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழலே இன்னும் நிலவுகிறது. இதுநாள் வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அரசுப் பள்ளி மாணவர்களே செய்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பள்ளி மாணவர்களை தூய்மைப்படுத்த வைப்பது தொடர்பாக பள்ளி கல்வி துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதி காரிகளுக்கு இன்று பள்ளிக் கல்வித் துறை அரசு முதன் மைச்செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளி வளாகத்தைச்சுத்தமாக வைத் துக் கொள்ள வேண்டும். பள்ளி மாண வர்களைஇந்தச் சுத்தப்படுத்தும் பணி யில் ஈடுபடுத்தக் கூடாது.இதற்கு உள் ளூர் மக்கள் அல்லது, 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிபவர்க ளைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
பள்ளியில் அறிவிப்புப் பலகையில் நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகா தார நிலையம் மற்றும் செல்வியர்களின் தொலைபேசி எண்களையும் எழுதப் பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கை பள்ளி கல்வித்துறை மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment