மேட்டூர் அணை - 2.10 லட்சம் கனஅடி நீர் திறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

மேட்டூர் அணை - 2.10 லட்சம் கனஅடி நீர் திறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

திருச்சி,ஆக.5- மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே, வெள்ளப் பெருக்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.

அணைகளில் இருந்து முன்னறிவிப்பின்றி நீர்திறப்பை அதிகரிக்கக் கூடாது என்றும், வெள்ள பாதிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளவும் அதிகாரி களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில்  கடந்த சில நாட் களாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கருநாடக மாநிலத்திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த 16-ஆம் தேதி அணை நிரம்பியது. அதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப் படுகிறது. நேற்று முன்தினம் (3.8.2022) ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, நேற்று (4.8.2022) மதியம் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சத்து 87 ஆயிரம் கனஅடி என காவிரி ஆற்றில் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் கடும் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி நீர் ஆர்ப் பரித்து செல்கிறது. பல பகுதிகளில் கரையைக் கடந்தும் வெள்ளம் பாய் கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோர மாவட்டங்களான திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல்கள்:

காவிரியில் அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரி  மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்கள் பாதிப்புக்குள் ளாகக் கூடும். எனவே, இந்த மாவட்டங் களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண் காணிப்பு அலுவலர்கள், உடனடியாக அங்கு விரைந்து சென்று உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் உடனடியாக திருச்சி மாவட்டத்துக்கு செல்ல வேண்டும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா 40 வீரர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்க்ளை அனுப்ப வேண்டும்.

இப்பகுதிகளில் பயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் நேரடி களஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்களும் மாவட்டங் களுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். கனமழையால் பாதிப்பு ஏற் படும் இடங்களில் ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில், குறிப்பாக இரவு நேரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது. பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்க வேண்டும்.

அனைத்து நிலை அலுவலர்களையும் கரையோர பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சில இடங்களில் மழையில் வீணாகிவிடுவ தாக செய்திகள் வருகின்றன. நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்ப் பாய்கள் கொண்டு மூட வேண்டும். உடனடியாக அவற்றை சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து, அதன்படி செயல்பட வேண்டும்.  -இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment