‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' நூல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' நூல் வெளியீடு

வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908..." நூல் வெளியீட்டு விழா 31.7.2022 அன்று மாலை 5.30 மணிக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. பேரா.க.அ.மணிக்குமார் தலைமை யில் பேரா.ஆ.திருநீலகண்டன் வரவேற்றார். அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி வாழ்த்துரை வழங்கினார். நூலை அறிமுகம் செய்து பேரா.வே.மாணிக்கம் உரையாற்றினார். த.மு.எ.க.சங்க மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். வரலாற்று ஆய்வாளர் செ.திவான் நூலைப் பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதி ஏற்புரை ஆற்றினார். பேரா.கண்ணா கருப்பையா நன்றி கூறினார்.


No comments:

Post a Comment