புதுடில்லி, ஜூலை 22- உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் நீதித்துறை தொடர்பான கேள்விகளுக்கு வியாழக் கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆக உள்ளது. 25 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆக உள்ளது. இந்த வயது வரம்பை உயர்த் தும் திட்டம் ஏதும் ஒன்றிய அரசிடம் இல்லை. கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், 15 ஆவது மக்களவையின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தபோது அந்த மசோதா வும் காலாவதியாகிவிட்டது. இனி அது போன்ற மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை.
மாவட்ட நீதிபதிகளை ஒன்றிய சட்டத் துறை செயலாளராகவோ, மாநில சட்டத் துறை செயலாளராகவோ நிய மிக்க முடியும். அதற்கு எவ்விதத் தடையுமில்லை என்றார்.
No comments:
Post a Comment