இந்தியாவில் புதிய கோவிட் ஓமிக்ரான் துணை மாறுபாடு வைரஸ் கண்டுபிடிப்பு உலக சுகாதார நிறுவனம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

இந்தியாவில் புதிய கோவிட் ஓமிக்ரான் துணை மாறுபாடு வைரஸ் கண்டுபிடிப்பு உலக சுகாதார நிறுவனம் தகவல்

டோக்கியோ, ஜூலை 10 இந்தி யாவில் புதிய கோவிட் ஓமிக்ரான் துணை மாறுபாடு  வைரஸ் கண் டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் சமீப வாரங்களாக கரோனா தொற்று பரவல் அதி கரித்து வருகிறது. இந்த நிலையில், கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய துணை மாறுபாடு ஙிகி.2.75 இந்தியா உட் பட பல்வேறு நாடுகளில் கண்டறி யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் - ஜெனரல் டெட்ரோஸ் அதா னோம் கெப்ரேயஸ் கூறினார்.

இந்தியா உள்பட உலக நாடு களில், கடந்த இரண்டு வாரங் களில் கரோனா வழக்குகள்  கிட் டத்தட்ட 30 சதவிகிதம் அதிகரித் துள்ளன என கூறிய அதோனம்,  “ஐரோப்பாவிலும் அமெரிக்காவி லும், ஙிகி.4 மற்றும்  ஙிகி.5 அலைகளை இயக்குகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் ஙிகி.2.75 இன் புதிய துணைப் பரம்பரையும் கண்டறியப் பட்டுள்ளது, அதை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஙிகி.2.75 என்று அழைக்கப்படும் ஒரு துணை மாறுபாடு தோன்றியுள்ள தாக தெரிவித்தவர், இது  “முதலில் இந்தியாவில் இருந்தும் பின்னர் சுமார் 10 நாடுகளில்  பரவி இருப் பது தெரிய வந்துள்ளது என்றார். இந்த  “துணை மாறுபாட்டின் பகுப்பாய்வு செய்ய இன்னும் வரையறுக்கப்பட்ட வரிசைகள் உள்ளன, ஆனால் இந்த துணை மாறுபாடு ஸ்பைக் புரதத்தின் ஏற்பி-பிணைப்பு டொமைனில் சில பிறழ்வுகளைக் கொண்டிருப்ப தாகத் தெரிகிறது. எனவே நாம் அதைப் பார்க்க வேண்டும். இந்த துணை மாறுபாட்டிற்கு கூடுதல் நோயெதிர்ப்பு ஏய்ப்பு தன்மை உள்ளதா அல்லது மருத்துவரீதியாக மிகவும் தீவிரமான தன்மை உள்ளதா என்பதை அறிவது இன்னும் தாமதமாகலாம் என்றும் தெரிவித்தவர்,  “நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்,

மேலும், உலக சுகாதார அமைப்பு அதைக் கண்காணித்து வருவதாகவும், அதன் ஷிகிஸிஷி-சிஷீக்ஷி-2 வைரஸ் பரிணாமம் (ஜிகிநி-க்ஷிணி) பற்றிய தொழில்நுட்ப ஆலோ சனைக் குழு உலகம் முழுவதிலு மிருந்து வரும் தரவை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.


No comments:

Post a Comment