அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு அலுவலகம் : தமிழர் தலைவர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு அலுவலகம் : தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்பு

அரியலூர், ஜூலை 16  அரியலூரில் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாநில இளைஞரணி மாநாட்டு அலுவலகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 15.7.2022 அன்று மாலை 6.30 மணிக்கு திறந்து வைத்தார்.

 அரியலூரில் ஜூலை 30ஆம் தேதி  திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தமிழ்நாடு முழுக்க முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனடிப்படையில், மாநாட்டுப் பணிக்காக அரியலூர் பேருந்து நிலையம் அருகில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாநில இளைஞரணி மாநாட்டு அலுவலகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். போக்குவரத்துத் துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான சா.சி.சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், மண்டலத் தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பிபிரபாகரன், அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார், அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், அரியலூர் மாவட்ட இளைஞரணி செய லாளர் க.கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

மாநில தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் திண்டுக்கல் மோகன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட அமைப்பாளர் ரத்தின. ராமச் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், தொழிலாளரணி சிவகுருநாதன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் திராவிட விஷ்ணு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் லெ.தமிழரசன், செந் துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்ச் செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், இளைஞரணி பொறுப்பாளர் ரஜினி,  வை.கலையரசன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், அரியலூர் நகர செயலாளர் கு.தங்கராசு, வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ராஜா, திருமானூர் ஒன்றிய செயலாளர் பெ.கோபிநாதன் நகர செயலாளர் சு.சேகர், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் த.செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment