அரியலூரில் காந்தியார் சிலை திறப்பு விழா - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி - அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

அரியலூரில் காந்தியார் சிலை திறப்பு விழா - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி - அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்பு

அரியலூரில் காமராசர் சிலைக்கு அருகில், காமராசர் பிறந்த நாள் அன்று (ஜூலை 15) அண்ணல் காந்தியார் உருவச் சிலையினை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், அரியலூர் நகராட்சித் தலைவர் சாந்தி கலைவாணன், செம்மொழி இராமசாமி, சுபா சந்திரசேகர், 'விடுதலை' நீலமேகம், சிந்தனைச்செல்வன், அரியலூர் பங்குதந்தை டோமினிக் சாவியோ மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment