Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
July 27, 2022 • Viduthalai

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (3)

புரட்சிக் கவிஞர் மாணவர்களிடமும், இளை ஞர்களிடமும் அளவளாவுவதில் மிகுந்த ஆர்வ மும், மகிழ்ச்சியும் கொள்வார்!

புதுமையானதும் வினோதமானதுமான எதனையும் பார்த்தால், சிறு குழந்தையாகவே மாறி விடுவார்! வாயைப் பொத்திக் கொண்டு, கையை ஒருவகையாகக் காட்டி அதிசயமானதை ரசிக்கும் அவரது பார்வையும், உடல் அசைவுகளும் தனி அலாதி ரகம்!

மற்ற நேரங்களில் - மேடைகளில், கர்ஜிக்கும் சிங்கமா இப்படி சிறு குழந்தை ஒரு புது பொம்மையைப் பார்த்துப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவதுபோல் மாறுகிறார் என்பதை எளிதில் எவராலும் எண்ணிப் பார்க்கவே முடியாது!

சில நேரங்களில் அவர் தனது வியப்பினை வெளியிட்டு, பாராட்டின் உச்சத்திற்கும் சென்று வெளியிடும் அந்த குழைவு நிறைந்த மகிழ்ச்சியை அருகில் இருந்து காணுவோருக்கு ஓர் அரிய அற்புதக் காட்சியேயாகும்!

"..... ஏம்ப்பா, நம்ம இராமநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கான் - என்னைப் பற்றி - என் கவிதை களைப் பற்றி! ("கவிஞரும் காதலும்") என்னம்மா எழுதியிருக்கான்! எனக்கே தெரியலே - நாம் இப்படி எழுதியிருக்கோமான்னு! அப்பப்பா சொல்... எப்படி சொல்றது! நீ படிச்சிருக்கியா? படி அதை.

இந்தப் புள்ள எழுதனதைப் படிச்சப் பிறகுதான் இப்படி நான் எழுதியிருக்கேனான்னு எனக்கே புரிஞ்சுது!"

நெஞ்சத்தின் அடியிலிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த பெரும் பாராட்டு எப்படிப் பொங்குகிறது பார்த்தீர்களா? 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவனாக அப்போதே இண்டர்மீடியட் வகுப்பில் (தற்போதுள்ள 11, 12ஆம் வகுப்புக்குச் சமம் அது) சேர்ந்தேன் - அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டப்படி தமிழ் வகுப்பு உண்டு. அதற்கு மதிப்பெண் உண்டு. புலவர் கா.வெள்ளை வரணானார், பண்டித அருணா சலம் பிள்ளை, புலவர் பூவ ராகவன் பிள்ளை (இவர் சிதம் பரத்திலிருந்து ஒரு மாட்டு வண் டியை அவரே ஓட்டிக் கொண்டு வரும் பெரும் (வைதிக) புலவர்), புலவர் சோமசுந்தரம் பிள்ளை - துறைத் தலைவர் டாக்டர் 

அ. சிதம்பரநாதனார், பண்டித லெ.பெ.கரு. இராமநாதன்  பிள்ளை, ஜி. சுப்ரமணிய பிள்ளை போன்றவர்கள் அருமையான பேராசிரியர்கள். 

அவர்களது தமிழ் வகுப்பு மிகவும் ஈர்ப்பு நிறைந்ததாக இருக்கும். பல்கலைக் கழகப் பாட நூலை - இண்டர்மீடியட் இடைநிலை வகுப்புத் தமிழுக்குரியதைத் தயாரித்து வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு விலைக்கு - வழங்கப்படும்.

அதேபோல் பிரெஞ்சு மொழிக்கும்கூட அதற்குப் பதிலாக எடுக்க விரும்புகிறவர்கள் எடுத் துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

பிரெஞ்சுப் படிக்க 2, 3 மாணவர்கள் அதிகபட்ச 5 மாணவ  - மாணவிகளே சேர்வர். வாரத்தில் இரண்டு வகுப்புகள் - இரண்டு நாள்கள் "அபெல் குளோவி" என்ற பிரெஞ்சு கற்பிக்கும் பேராசிரியர் புதுச்சேரியிலிருந்து வந்து தங்கிக் கொண்டு  (வருகைப் பேராசிரியர் போல் இருந்து) பாட வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுப்பார்.

புதுச்சேரிக்கு அடிக்கடி போய் அங்கே பிரெஞ்சு மொழி பேசும் "மிஸி" (சார் என்று பொருள்)களின் பேச்சைக் கேட்டு வியந்தவன் நான். சிறந்த இலக்கிய மொழி பிரெஞ்சு மொழி என்ற பெருமையும் அதற்கு உண்டு!

ஆதலால் இண்டர்மீடியட் வகுப்பில் புதிதாக பிரெஞ்சு மொழி வகுப்பில் சேர்ந்து படித்தால் என்ன? மற்றொரு உலக மொழியை நாம் கற்றிருக்கும் வாய்ப்பும் கிட்டுமே என்று கருதி யோசித்தேன்.

நாள்தோறும் கடலூரிலிருந்து 30 மைல் தொலைவு ரயிலில் சென்று வந்திடும் நிலையில், பிரெஞ்சு வகுப்பினால், வாரத்தில் இரண்டு நாள் 'லெஷர்' வகுப் பிலாத ஓய்வு. அதனால் மற்ற பாடங்களில் அதிக கவனம் செலுத்தவும் அது உதவுமே என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

என்றாலும் அது நம் தமிழ் மொழி வகுப்பை நாமே புறக்கணிப்பதுபோல ஆகாதா என்று எனது மற்றொரு கேள்வியும் மனப் போராட்டத்தை உருவாக்கி விட்டது!

மனக் குழப்பம் - மனப் போராட்டத்தை எப்படித் தீர்ப்பது - என்ன முடிவு காணுவது - என்று சிலநாள் யோசித்துக் கொண்டே தமிழ் வகுப்பிற்கு வழக்கம் போல் சென்று படித்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது ஒரு நாள் புரட்சிக் கவிஞர், புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியே வெளியூர் ரயிலுக்குச் செல்ல வந்தவர், முதுநகரில் வந்து வழக்கமாக ஒரு நாள் தங்கினார். நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று அவருக்குப் பணிவிடை செய்தோம்.

அப்போது கவிஞர் தனியே அமர்ந்து எதோ யோசனையில் இருந்தார். நான் மட்டும்தான் அவருடன் இருந்தேன். திடீரென எனக்கொரு யோசனை! பிரெஞ்சு மொழி படிக்கும் வகுப்பில் சேரும் மனக் குழப்பம் தீர கவிஞரையே ஆலோசனை, அறிவுரை கூறக் கேட்டால் என்ன என்று முடிவு செய்து அவரிடம் பேசினேன்.

என்ன சொன்னார் கவிஞர்?

(தொடரும்)


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn