சாலையோரம் வசிப்பவர்கள் இரவு நேர காப்பகங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

சாலையோரம் வசிப்பவர்கள் இரவு நேர காப்பகங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுரை

சென்னை, ஜூலை 1- சென்னை மாந கரில் பலர் வீடு இல்லாமல் உணவு இல்லாமல் இரவு நேரங்களில் சரி யாக தூக்கம் இல்லாமல் மழை யிலும், வெயிலிலும் கைக்குழந்தை முதல் வயதானவர்கள் வரை தவித்து வருகின்றனர். மேலும் ஆதரவற்ற ஆயிரக்கணக்கானோர் வீடின்றி சாலைகளில் வசித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் தினமும் வேலைக்காக சென் னைக்கு பல ஊர்களில் இருந்து பலர் வருகிறார்கள். இவர்களெல் லாம் எங்கு தங்குவது என்று தெரி யாமல் பேருந்து, ரயில் நிலையங் களிலும் தங்கி வாழ்க்கையை சென் னையில் ஆரம்பிக்கின்றனர். இப் படி துன்பப்படும் மக்களுக்கும், பெற்றோர்களால் கைவிடப்பட்டு குழந்தைத் தொழிலாளிகளாக உள் ளவர்களை மீட்டு அவர்களுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் இரவு நேர காப்பகம் தொடங்கப் பட்டது.

இதுவரை மொத்தம் 55 இரவு நேர காப்பகங்கள் சென்னை மாநக ராட்சியின் பொது சுகாதாரத் துறை மூலம் நடத்தப்பட்டு வருகி றது. அதில், 6 காப்பகங்கள் பெண் குழந்தைகளுக்கும், 5 காப்பகங்கள் ஆண் குழந்தைகளுக்கும், ஆண் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு ஒரு காப்பகம், பெண்களுக்கு 11 காப்பகங்கள், ஆண்களுக்கு 12  காப்பகங்கள், இருபாலருக்கும் ஒரு காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 4 காப்பகங் கள், ஆண் மற்றும் பெண்களுக்கு 13 சிறப்பு காப்பகங்கள், மாற்று திறனாளிகளுக்கு 2 காப்பகங்கள் என பிரித்து மொத்தம் 55 காப்ப கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த காப்பகங்களானது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். நபர் ஒருவருக்கு  50 சதுர அடி இடம் அளிக்கப்பட்டு அவர் களுக்கென பாய், போர்வை, சலவை  செய்வதற்கான பொருட் கள், இவர்களின் பாதுகாப்பு பொருட் களை வைக்க லாக்கர், சுத்தமான முறையில் நீர், காற்றோட்டமான இடம், தூய்மையான குளியல் மற் றும்  கழிப்பறை போன்ற வசதிகள் சென்னை மாநகராட்சி மூலம் இவர்களுக்கு கிடைக்கிறது. மேலும் இவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க சமையல்காரர்கள், இரவு நேரத்தில் பாதுகாக்க காவலர்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் நிர்வகிக்க தகுதியான தொண்டு நிறுவனங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. குறைந்தது ஒரு  காப்பகத்தில் 30 பேர் மற்றும் அதற்கு அதிகமானோர் தங்கும் அளவில் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. காப்பகத்தில் தங்கு பவர்களுக்கு இரவு உணவு மட்டும் வழங்கப்படும்.

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை உணவுக்கென தொண்டு நிறுவனங்களுக்கு வழங் கப்படுகிறது. இந்த காப்பகங்கள் எல்லாம் கரோனா பேரிடர் காலத்தில் சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலை யில் இந்த காப்பகங்களை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாலையோரம் வசிப்பவர்களை தேடிச் சென்று இந்த காப்பகங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இதனால் காப்பகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் அடிப் படையில், தற்போது இந்த காப்ப கங்களில் மொத்தம் 1,616 பேர் தங்கி பயனடைந்து வருகின்றனர். 

சென்னை மாநகராட்சி உயரதி காரிகள் வாரம் ஒரு முறை என இந்த காப்பகங்களில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆய்வுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். இதுபோன்ற காப்பகங்கள் சாலையோரம் வசிப் பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

சென்னை மாநகரப் பகுதிகளில் வீட்டு வாடகை அதிகமாக இருப்ப தால், கூலி வேலை செய்பவர்கள் பலர் இரவு நேரங்களில் தங்குவ தற்கு இடமில்லாமல் சாலையோ ரங்களை பயன்படுத்தி வருகின்ற னர். அவர்களுக்கும் இந்த காப்ப கங்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி சாலையோரம் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் உணவு தேவை களை கருத்தில் கொண்டு இது போன்ற இரவு நேர காப்பகங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலை யில் அதற்கான உறுதி அளிக்கப் பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்ட லங்களில் எந்தெந்த இடங்களில் இந்த காப்பகங்களை அமைக்கலாம் என்று கள ஆய்வு நடத்தி ஆதரவற் றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

No comments:

Post a Comment