மகாராட்டிரத்தில் 4ஆம் தேதி சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

மகாராட்டிரத்தில் 4ஆம் தேதி சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு

மும்பை, ஜுலை 2 பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராட்டிரா சட்டப் பேரவையில் ஜூலை 4-ஆம் தேதி பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் உத்தரவிட் டுள்ளார்.

மகாராட்டிராவில், சிவசேனா, காங் கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி வகித்தார். சில நாள்களுக்கு முன்பு, சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த் தினார். அவருக்கு 38 சிவசேனா  மற்றும் சில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும், ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய் தது. இதனால், முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே பதவி விலகினார்.

பின்னர், பாஜகவும், சிவசேனா அதிருப்தி அணியும் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற் றனர். இந்நிலையில், மகாராட்டிரா சட்டப்பேரவையில் ஜூலை 4-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

இதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில், பேரவையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடக்கிறது. நாளை (3ஆ-ம் தேதி) பேரவைத் தலைவர் தேர்வாகிறார். 4ஆ-ம் தேதி சட்டப்பேரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்குக் கோருகிறது. பாஜக, சுயேச்சைகள் மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவும் இருப்ப தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு எளிதாக வெற்றி பெறும்.


No comments:

Post a Comment