நாடாளுமன்ற ஜனநாயகம்? எதிர்க்கட்சியினர் 19 பேர் இடைநீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

நாடாளுமன்ற ஜனநாயகம்? எதிர்க்கட்சியினர் 19 பேர் இடைநீக்கம்

புதுடில்லி, ஜூலை 27 நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சி மாநிலங்களவையில் நேற்று (26.7.2022) விதிகளை மீறியதாக 19  பேர் உறுப்பினர்கள்  இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மக்களவையில் நேற்றுமுன்தினம்  பதாகை களுடன் பேராட்டம் நடத்திய காங் கிரஸ் உறுப்பினர்கள் 4 பேர் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி, நேற்று (26.7.2022)  முழக்கங்களை எழுப்பிய  திரிணமூல் காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ், மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேர், இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களில் திமுக உறுப்பினர்கள் கனிமொழி என்விஎன் சோமு, எம்.எச்.அப்துல்லா, கல்யாணசுந்தரம், கிரி ராஜன், என்.ஆர் இளங்கோ, சண்முகம் ஆகியோரும் அடங்குவர். இது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், 

“எதிர்க்கட்சி உறுப் பினர்கள் 19 பேரை இடைநீக்கம் செய்யும் முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது. அவர்கள் அவைத் தலைவரின் வேண்டு கோளை தொடர்ந்து புறக்கணித்தனர். ஒன்றிய நிதியமைச்சர் நாடாளுமன்றம் திரும் பியதும், விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு அரசு தயார்” என்றார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப் பினர்கள் அவையிலிருந்து வெளியேறா மல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், மாநிலங்களவை நேற்று ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திரிணமூல் தலைவர் டெரிக் ஓ பிரையன், “இந்த அரசு ஜனநாயகத்தை இடைநீக்கம் செய்துள்ளது” என்றார். 

திரிணமூல் கட்சி சுஸ்மிதா தேவ் கூறுகையில், 

“பணவீக்கத்துக்கு மோடி அரசிடம் பதில் இல்லை. நிதிய மைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், எங்கள் கேள்விகளுக்கு பிரதமரால் பதில் அளிக்க முடியும்.நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப் பியதற்காக 19 மாநிலங்களவை உறுப் பினர்களை  இடைநீக்கம் செய்தது நியாயமற்றது. நாங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே யும், வெளியேயும் போராடுவோம்” என்றார்.

அமைச்சர் விளக்கம்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று கூறுகையில், “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா பாதிப் பிலிருந்து குணமடைந்து இன்னும் ஓரிரு நாளில் திரும்பிவிடுவார். அவர் வந்ததும் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடை பெறும். பல நாடுகளுடன் ஒப்பிடும் போது, பணவீக்கம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

நாட்டில் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 15.18 சதவீதமாக இருந்தது. இது, அதற்கு முந்தைய மாதத்தில், 15.88 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தின் அடிப்படையிலான மொத்தவிலை குறியீடு கடந்த 15 மாத மாக இரட்டை இலக்கத்தில் உள்ளது.

பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்புவதால் மழைக் கால கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. தயிர், பிரட், பன்னீர் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.


No comments:

Post a Comment