உச்சநீதிமன்றத்தில் 19 ஆம் தேதி மேகதாது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

உச்சநீதிமன்றத்தில் 19 ஆம் தேதி மேகதாது வழக்கு

புதுடில்லி, ஜூலை 12 மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19 ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

காவிரி தொழில்நுட்பப்பிரிவின் துணைத் தலைவர் எம்.செல்வராஜு சார்பில் வழக்குரைஞர் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் 'மேகதாது அணை திட்டம் - கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவையோ காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்' என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகி மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார். இதற்கு கருநாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆட்சேபித்தார். தமிழ்நாடு அரசின் முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19 ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.


No comments:

Post a Comment