சென்னை, ஜூலை11 தமிழ்நாட்டில் ஒரு லட்சம் இடங்களில் நேற்று (10.7.2022) நடந்த சிறப்பு முகாம் மூலம் 17.55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டது. சென்னை, தமிழ்நாட்டில் நேற்று ஒரு லட்சம் இடங்களில் 31-ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
இதில் சென்னையில் மட்டும் 200 வார்டுகளுக்கு 1,600 சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதில் முதல் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும், 2-ஆவது தவணை தடுப்பூசி 10 லட்சத்து 88 ஆயிரத்து 865 பேருக்கும் போடப் பட்டுள்ளது.
மேலும் பூஸ்டர் தடுப்பூசி 3 லட்சத்து 13 ஆயிரத்து 499 பேருக்கும் செலுத் தப்பட்டது. தமிழ் நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 95.23 சதவீதமும், 2-ஆவது தவணையாக 87.25 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொண் டுள்ளனர்.
இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட் பட்டவர்களில் தல் தவணையாக 18 லட்சத்து 94 ஆயிரத்து 484 பேருக்கும், 2-ஆவது தவணையாக 13 லட்சத்து 7 ஆயிரத்து 217 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேருக்கும், 2-ஆவது தவணையாக 25 லட்சத்து 5 ஆயிரத்து 819 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment