சென்னை கடற்கரை பகுதிகள் ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு: தமிழ்நாடு அரசு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

சென்னை கடற்கரை பகுதிகள் ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு: தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை,ஜூலை 29- தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வசதித்துறையின் மானிய கோரிக்கையின்போது அமைச்சர் சு.முத்துச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற் றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையுடன் கலந்தாலோசித்து மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப்பகுதியில், மறு சீரமைப்பு மற்றும் புத்தாக்கப் பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் சென்னை பெருநர வளர்ச்சிக் குழுமத்தால் செயல்படுத்தப் படும் என்று குறிப்பிட்டார். 

இந்த அறிவிப்பை செயல் படுத்தும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ஹித்தேஷ்குமார் மக்வானா வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது:- 

மக்கள் பயன்பாடு

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னையின் கடற்கரைப் பகுதி எண்ணூர் முதல் கோவ ளம் வரையில் நீண்டுள்ளது. இது இயற்கையான நீண்ட கடற்கரைப் பகுதியாகும். இந்த கடற்கரைப் பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். 

இதில் குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகள் மக்கள் அதி களவில் பொழுதுபோக்குக்காக கூடும் பகுதிகளாகும். இவை தவிர மேலும் 20 பகுதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்துகின் றனர்.

கடல் அரிப்பு, மண்குவியல்

ஆனால் கடல் அரிப்பு மற்றும் மண் குவியல் இந்த கடற்கரைப் பகுதிகளில் அதிக ளவில் பாதிப்பை ஏற்படுத்து கிறது. குறிப்பாக 3 கி.மீ. பகுதி, கடல் அரிப்பாலும், 7 கி.மீ. பகுதி மண் குவியலாலும் பாதிக்கப் படும் என்று 2018ஆம் ஆண்டு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மய்யத்தின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தால், சென் னை கடற்கரைப் பகுதி மறு சீரமைப்பு மற்றும் புத்தாக்கம் (சி.எஸ்.ஆர்.ஆர்.) என்ற திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

அரசு அனுமதி 

இத்திட்டத்தின் கீழ், தற் போது மெரினா முதல் கோவ ளம் வரையிலான கடற்பகுதி ரூ.100 கோடியில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப் படுகிறது. இதன்படி, இப்பகுதியில் மரத் தால் ஆன நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் உள் ளிட்டவை அமைக்கப் படுகின்றன. மேலும் மக்கள் பங்களிப்பின் அடிப்படையிலும் திட்டம் செயல்படுத்தப் படு கிறது. 

எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த தனித்துவமான நிர்வாக அமைப்புடன் கூடிய சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர் செயலாளர் பரிந் துரைத்துள்ளார். 

இதை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ரூ.100 கோடியில் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க முன் அனுமதியளித்துள்ளது. அந்த சிறப்பு நோக்கு அமைப்பில், வீட்டுவசதித்துறை செயலா ளரை தலைவராகவும், வனத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், டுபிட் கோ தலைவர் உள்ளிட்ட 15 பேரை உறுப்பினர்களாகவும், பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளரை தலை மைச் செயல் அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளது. 

திட்டத்துக்கான ஒப்பந்தம் கோருதல் உள்ளிட்ட பணிகளை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் மேற் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment