சேந்த நாட்டில் ஜூன் இருபத்தி ஆறில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

சேந்த நாட்டில் ஜூன் இருபத்தி ஆறில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த முடிவு!

சேந்தநாடு, ஜூன் 18- விழுப்புரம் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 14.6.2022 அன்று மாலை 6 மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை சேந்தநாடு பெரியார் தோட் டத்தில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில், மாவட்ட தலை வர் சுப்பராயன், மாவட்ட செய லாளர் அரங்க பரணிதரன் முன் னிலையில் நடைபெற்றது.

26.6.2022 அன்று சேந்த நாட் டில் கழகப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் தமிழர் தலைவரை மேளதாளத்துடன் வரவேற்பது எனவும், பொதுக் கூட்டத்தை மாநாடு போல் பிரம்மாண்டமாக நடத்துவது எனவும் கூட்டத்தில் பேசிய அனைவரும் கருத்து உரைத் தனர். 

மண்டல இளைஞரணி செய லாளர் பகவான்தாஸ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பங் கேற்று திமுகவைச் சேர்ந்த பழனி, முருகதாஸ், சரண்ராஜ், ரஜினி திருவேங்கடம், தண்ட பாணி ஆகியோரும், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கிருஷ்ண பாண்டி, செயலாளர் கவுதமன், கடலூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் பண்பாளன், கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம், விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஒன்றிய செயலாளர் செல்வகுமார் நன்றியுரை கூறினார்-

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

செஞ்சியில் ஜூன் 19இல் நடக்கவுள்ள பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தனி ஊர்தியில் சென்று பங்கேற்பது எனவும், 

ஜூன் 26 அன்று சேந்த நாட்டில் நடைபெறும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை மாநாடு போல் நடத்துவது எனவும், 

இரு இடங்களில் கல்வெட்டு உடன் கழகக் கொடிகளை உயர்த்துவது எனவும், மாவட் டத்திற்கு ஒதுக்கும் விடுதலை சந்தானம் சேர்க்கையை முழுவ துமாக முடித்துத் தருவது என வும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

No comments:

Post a Comment