'எண்ணும் எழுத்தும்' - முன்னோடித் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

'எண்ணும் எழுத்தும்' - முன்னோடித் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2022) திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், "எண்ணும் எழுத்தும் " என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு புத்தகப்பை, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். இவ்விழாவில், பால்வளத் துறை அமைச்சர்  சா.மு.நாசர்,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர்  திண்டுக்கல் லியோனி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்  காகர்லா உஷா,  பள்ளிக் கல்வி ஆணையர்  க.நந்தகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment