பெரியார் பன்னாட்டமைப்பு உலக மாநாடு - அழைப்பு! மனிதநேய அன்பர்களே & நண்பர்களே, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

பெரியார் பன்னாட்டமைப்பு உலக மாநாடு - அழைப்பு! மனிதநேய அன்பர்களே & நண்பர்களே,

மிக்க மகிழ்வுடன், நீண்ட இடைவெளிக்குப் பின், நேரே கூடுவோம், வாருங்கள்! கனடா நாட்டின் டொராண்டோ (ரொறன்ரோ) நகரிலே மாநாடு! செப்டம்பர் 24 - 25, 2022 (சனி & ஞாயிறு) - 2 நாட்கள் பெருவிழா! உலகெங்குமிருந்து பெரும் தலைவர்கள் & மனிதநேய அமைப்புகள் பங்கேற்பர்! தமிழ்நாட்டின் திராவிட மாடல் & சமூகநீதி  உலக அளவில் புகழ் பெறுவதைக் காண வாருங்கள்! இது பெரியார் பன்னாட்டமைப்பின் மூன்றாவது உலக மாநாடு!  செருமனி (2017) & அமெரிக்காவில் (2019) நடந்தது போலவே, இம்முறை டொராண்டோவிலும் (2022) சிறப்புற நடக்கும். அனைவரையும் இனிதே வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்! காலம் கருதி, விரைவாக ஏற்பாடுகள் செய்வோம். அனைவரையும் இப்போதே அன்புடன் அழைக்கின்றோம். மேலதிகத் தகவல்கள் விரைவில்! இணைந்திருப்போம்!

இங்ஙனம்,
பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா
(3.6.2022)


No comments:

Post a Comment