ஒன்றிய அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2019 - 2021ஆம் ஆண்டுக்கான அய்ந்தாம் தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழ்நாட்டில் 44.9 சதவீதப் பிரசவங்கள்அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறுகின்றன. தேசிய அளவில் தெலுங்கானாவுக்கு(60.7 சதவீதம்) அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2015 - 2016 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நான்காவது குடும்பநலக் கணக்கெடுப்பில் இது 34.1 சதவீதமாக இருந்தது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் அறுவைச் சிகிச்சை முறை பிரசவங்கள் 10.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
Tuesday, June 14, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment