சென்னை, ஜூன் 25 தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக் காலம், 2012 ஆக.,18இல் நிறைவடைந்தது. தற்போது வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, அரசாணை
வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவல் சார் உறுப்பினர்களாக, நிதித்துறை செயலர், தொழிலாளர் ஆணையர், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர், தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரிய முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவல் சாரா உறுப்பினர்களாக, வேலை அளிப்போர் பிரதிநிதிகளாக பசுமை வளவன், அந்தோணி ஸ்டீபன், காட்சன் சாமுவேல், கலாவதி, ஆன்டோ பிரைடன்; தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக, ஞானதாஸ், சிங்காரன், சடையப்பன், பழனிசாமி, ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment