ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

  முப்படை தலைமை தளபதி பதவிக்கான நியமன விதிகளில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. அதன்படி, பணியில் இருக்கும் அல்லது பணி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், ஏர் மார்சல், வைஸ் அட்மிட்ரல் ஆகியோர் முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்களாவார்கள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 சிதம்பரம் கோயிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதை தீட்சிதர்கள் தடுத்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பி.கே. சேகர்பாபு.

தி ஹிந்து:

றீ இஸ்லாமிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள மோதல் இந்தியாவிற்கு ஏற்றுமதி, இறக்குமதி ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

 மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்தால் அரசமைப்புச் சட்டத்தை முழுவதுமாக மாற்றி விடுவார்கள், ப.சிதம்பரம் பேச்சு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment