ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தை நாடாளு மன்றத்தில் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும், தெலுங் கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் பேச்சு.

றீ குஜராத் 2002 கலவரத்தில் மோடி மீதான குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அப்பாவி மக்கள் மீது பழி சுமத்தியதாக தீஸ்தா சீதல்வாட், மேனாள் காவல்துறை இயக்குநர் ஆர்.பி.சிறீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆர்எஸ்எஸ்-க்கு அறிவியல் பார்வையும், நாட்டின் நலனுக்கான சிந்தனையும் உள்ளதாம், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இந்து சமய மற்றும் அறநிலைய துறை, 14 வருட இடைவெளிக்குப் பிறகு, ஜூலை நடுப்பகுதியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தொடங்க உள்ளது.

* தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சரிபார்க்க தமிழ் நாடு அரசு நியமித்துள்ள சமூக நீதி கண்காணிப்புக் குழு ஜூலை முதல் வாரத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது..

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment