குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 22- குடியரசுத் தலை வர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட் டியிடுகிறார். ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக திரவு பதி முர்மு நிறுத்தப்பட்டு உள் ளார். 

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர்ரை தேர்ந்தெடுப்பதற் கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்து வருகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் ஜூலை மாதம் 25-ஆம் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் குடி யரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர் தல் ஆணையம் கடந்த 9ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4,033 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டு புதிய குடியரசுத் தலை வரை தேர்ந்தெடுப்பார்கள். குடி யரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆளும் பா.ஜனதா தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டி யிடும் வேட்பாளரை தேர்ந் தெடுக்க தீவிர ஆலோசனை நடந்து வந்தது. நேற்று மாலை பா.ஜனதா தலைமை அலுவல கத்தில் அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது. 

அதில், பிரதமர் மோடி, ஒன் றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா, மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவு கான் ஆகியோர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில், குடியர சுத் தலைவர் தேர்தல் வேட்பா ளர் பற்றி ஆலோசனை நடத்தப் பட்டது. திரவுபதி முர்மு இதற்கி டையே நேற்று (22.6.2022) இரவு பா.ஜ.க. கூட்டணி சார்பில் குடி யரசுத் தலைவர் வேட்பாளரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்தார். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி சார் பில் குடியரசுத் தலைவர் வேட் பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்.

வாழ்க்கை குறிப்பு: ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட் டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவு பதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் இறந்து விட்டனர். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த திரவுபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட் டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த் தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால் நடை வளர்ச்சித் துறை அமைச் சராகவும் இருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார். ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமை யும் திரவுபதி முர்மு பெற்றார். ஒடிசாவை சேர்ந்தவர் அமைச் சரா வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

இந்த தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியா வின் முதல் பழங்குடியின பெண் அமைச்சரா என்ற சிறப்பை பெறுவார். யஷ்வந்த் சின்கா எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, டில்லியில் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கூட் டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று (21.6.2022) கூட்டி இருந்தார். 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார் ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பி னர் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தேசிய மாநாடு கட்சியின் ஹஸ் னயின் மசூதி, புரட்சிகர சோஷ லிஸ்டு கட்சியின் சார்பில் என். கே.பிரேமசந்திரன், ஏ.அய்.எம்.அய்.எம். கட்சி சார்பில் இம் தியாஸ் ஜலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பா ளராக மேனாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவை (84) நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை சரத்ப வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேனாள் நிதி அமைச் சர் யஷ்வந்த் சின்கா, பீகார் மாநி லத்தை சேர்ந்தவர். மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி. 1984ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகி,  அரசியல் களத்தில் குதித்தார். ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக, ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலா ளராக, பா.ஜ.க.வின செய்தி தொடர்பாளராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி உள் ளார். 

நேற்றுதான் (21.6.2022) அவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக போட்டியிடக்கூடும் என தக வல்கள் வெளியாகின. அதுவே நடந்துள்ளது. யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்த போது மத்திய நிதி மந்திரியாக பணியாற்றி உள்ளார். வாஜ்பாய் பிரதமர் பதவி வகித்தபோது ஒன்றிய நிதி அமைச்சகராகவும், வெளியுறவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

No comments:

Post a Comment