சென்னை,ஜூன் 8 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 22 ஆயிரம் அரசு பேருந்துகள் உள்ளன. உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் 3 ஆயிரம், 4 ஆயிரம் பேருந்துகள்தான் உள்ளன. சென்னையில் தினமும் அனைத்து பேருந்துகளும் இயங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அதிகமான ஊழியர்கள் விடுப்பு எடுப்பதால் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. தேவையற்ற விடுப்புகளை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். அரசு பேருந்துகளில் 40 விழுக்காடு பெண்கள்தான் பயணம் செய்து வந்தனர். பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் பெண்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. இப்போது 61 விழுக்காடு பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் உள்ளது. ஒன்றிய அரசு டீசல் விலையையும் உயர்த்தி வருகிறது. பல்வேறு நிர்வாக சிக்கல்களுக்கு இடையே தான் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பயண திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நிர்வாக சிக்கல்களை தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. -இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment