தமிழ்நாட்டில் 589 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

தமிழ்நாட்டில் 589 பேருக்கு கரோனா

 

சென்னை, ஜூன் 18 தமிழ்நாட்டில் நேற்று (17.6.2022) 589 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

 புதிதாக 15 ஆயிரத்து 742 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 298 பேரும், பெண்கள் 291 பேரும் உள்பட 589 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேர், கோவையில் 39 பேர் உள்பட 29 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

9 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 31 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 96 பேரும் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உள்ளது. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை. 

 தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 694 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,311 பேரும், செங்கல்பட்டில் 552 பேரும், கோவையில் 172 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment