சென்னை,ஜூன்13- கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் நேற்று (12.6.2022) ஒரு லட்சம் இடங்களில் 30ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 300 முகாம்கள் நடத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிடப் பட்டது. அந்தவகையில் வார்டுக்கு 8 சுகாதார குழுக்கள் என 200 வார்டுக்கு 1600 சுகாதாரக் குழுக்கள் அமைக் கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
நேற்று (12.6.2022) ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 13 லட்சத்து 83 ஆயிரத்து 573 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2 லட்சத்து 44 ஆயிரத்து 520 பேருக்கும், 2ஆவது தவணையாக 10 லட்சத்து 30 ஆயிரத்து 753 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி 1 லட்சத்து 8 ஆயிரத்து 300 பேருக்கு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 94.31 சதவீதமும், 2ஆவது தவணையாக 84.81 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 17,62,663 பேருக்கும், 2ஆவது தவணையாக 10,85,265 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 29,87,648 பேருக்கும், 2ஆவது தவணையாக 24,23,198 பேருக்கும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயது மேற்பட்டவர்களுக்கு என 13,51,908 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்களில் மட்டும் இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment