கருநாடகாவில் ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

கருநாடகாவில் ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக நிலநடுக்கம்

பெங்களூரு, ஜூன் 29 கருநாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில்நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.5 ரிக்டர் அளவில்  காலை 7.45 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி. மீட்டர் என தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித் துள்ளது. சாம்பாஜே, அறந்தோடு, பெராஜே, ஜல்சூர், உபரட்கா, தொடிகானா மற்றும் மிட்டூர் மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் குடியிருப்பு வாசிகள் நான்கு விநாடிகள் நீடித்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். 


No comments:

Post a Comment