தமிழ்நாட்டில் புதிதாக 255 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 14, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 255 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, ஜூன் 14 தமிழ்நாட்டில் நேற்று (13.6.2022) ஆண்கள் 130, பெண்கள் 125 என மொத்தம் 255 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 127 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,637 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 18,159 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 134 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,453 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 249 ஆகவும், சென்னையில் 124 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று காலை நேர நிலவரப்படி இந்தி யாவில் புதிதாக 8,084 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய மக்கள் நல்வாழ்வுதுறை தெரிவித்துள்ளது. 47,995 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4.592 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 195.19 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment