தமிழ்நாட்டில் புதிதாக 195 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 195 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, ஜூன் 9 தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 106, பெண்கள் 89 என மொத்தம் 195 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 95 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 56,512 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 17,466 பேர் குணமடைந் துள்ளனர். இன்று மட்டும் 101 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  உயிரிழப்பு இல்லை.

தமிழ்நாட்டில் நேற்று (8.6.2022) கரோனா தொற்று பாதிப்பு 144 ஆகவும், சென்னையில் 82 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.  பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment