புதுடில்லி. ஜூன் 17 குடி யரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என் டிஏ) அரசு, தான் போட்டியிட வைக் கும் வேட்பாளரை குடி யரசு தலைவராக்கும் முயற் சியில் தீவிரமாக இறங்கி யுள்ளது.
இதற்கான பொறுப்பை, பாஜகவின் மூத்த தலை வரும் ஒன்றிய பாதுகாப் புத் துறை அமைச்சரு மான ராஜ்நாத் சிங்கிடம் வழங்கியுள்ளது. எதிர்க் கட்சிகளின் பல்வேறு தலைவர்களு டன் ராஜ்நாத் சிங், பாஜக வேட்பா ளரை ஆதரிக்கும்படி தொலைபேசியில் கோரி வருகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகளில் 48 சதவிகி தம் ஆளும் ஒன்றிய அர சிடம் உள்ளது. இதில், கூடுதலாக 3 சதவீதம் பெற பாஜக, 3 மாநில முதல்வர்களை நம்பி உள் ளது. இப்பட்டியலில் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல் வரான நிதிஷ்குமார் முதலிடம் பெற்றுள்ளார். இவருடனான பாஜக உறவு சமீப காலமாக மோதலுக்கு உள்ளாகி வருகிறது. பாஜகவின் ஆதரவுடன் ஆளும் இவர், கடந்த இரு குடி யரசுத் தலைவருக்கானத் தேர்தல்களில் கூட்ட ணியை பற்றிக் கவலைப் படாமல் ஆதரவளித்தி ருந்தார். எனவே, இந்த முறை அவருடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான் பேசி வரு கிறார்.
அடுத்தபடியாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் உள் ளார். வேட்பாளரை பொறுத்து முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆத ரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடித் தலை வரும் ஜார்க்கண்டின் மேனாள் ஆளுநருமான திரவுபதி முர்மு பெய ரையும் பாஜக பரிசீலிப்பதாகத் தெரிகிறது.
மூன்றாவதாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட் டியை பாஜக குறி வைத் துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவ ரான இவர் ஏற்கெனவே பல விவகாரங்களில் பாஜகவிற்கு ஆதரவளித் துள்ளார். எனவே அவ ரது ஆதரவு கிடைக்கும் என பாஜக நம்புகிறது.
இந்நிலையில், குடி யரசு தலைவர் வேட்பாள ராக பேசப்படும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சி களுடன் ஆலோசிக்க உள்ளார்.
இவர், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் கூட்டத்துக்கு வந்த 17 எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவர்களுடன் வரும்
21-ஆம் தேதி டில்லியில் ஆலோசனை நடத்துகிறார். கடந்த முறை எதிர்க்கட் சிகளின் கூட்டத்தில் பவாரை முன்னிறுத்த முயற்சிக்கப்பட்டது. இதற்கு மறுத்துவிட்ட பவார் வரும் 21இ-ல் தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா? என்ற கேள் வியும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment