புதுடில்லி, ஜூன் 19 நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக 12,899 பேர் பாதித்துள்ளனர்.
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,96,692 ஆக உயர்ந்தது. புதிதாக 15 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,855 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,518 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,99,363 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.62% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
No comments:
Post a Comment