கலசபாக்கம், ஜூன் 20 தமிழ்நாட்டிலுள்ள 12,525 ஊராட்சிகளில் முழு சுகாதாரத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையை உடனடியாக பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு கிராம ஊராட்சிகளில் பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள், கழிவுநீர் கால்வாய் விவரம், கிராமங்களில் தனிநபர் கழிவறைகளின் எண்ணிக்கை, கழிவறை இல்லாத வீடுகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து உரிய வரைபடங்கள் எடுத்து அனுப்பப்பட உள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் குப்பை அள்ளும் வண்டிகள் எண்ணிக்கை, அவற்றில் பழுதான வாகனங் களின் எண்ணிக்கை ஆகியவை குறித்தும் கணக்கெடுத்து அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் முழு சுகாதார திட்ட அறிக்கையாக அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அந்தந்த ஊராட்சிகளில் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment